என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேற்கு மாம்பலத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
போரூர்:
மேற்கு மாம்பலம் பிருந்தாவன் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜூ.
இவரது மகன் தமிழ்செல்வன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். தமிழ்செல்வன் ஏற்கனவே நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 4 பாடங்களில் பெயிலாகி விட்டார்.
இதனால் தந்தை ராஜூ தமிழ்செல்வனை கண்டித்தார். மேலும் தற்போது அரையாண்டு தேர்வு எழுதியுள்ள தமிழ்செல்வன் கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் படுக் கையறையில் தமிழ்செல்வன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமாபுரம் அம்பாள் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். பிளாஸ் டிக்கம்பெனி ஊழியர். இவரது மனைவி நதியா(30) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.
நதியாவுக்கு கணவர் ரமேசுடன் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் படுக்கையறையில் நதியா சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன் வழக்குப் பதிவு செய்தார்.
திருமணம் முடிந்து 6½ ஆண்டுகளே ஆவதால் கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்