search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை
    X

    திருப்பூரில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை

    திருப்பூர் 15. வேலம்பாளையம் கண்மணி கார்டனில் இன்று அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15. வேலம்பாளையம் கண்மணி கார்டனில் இன்று அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தபோது வாலிபர் தலை சிதைந்து இறந்து கிடந்தார். அருகே ரத்தக்கறையுடன் பாறாங்கல் மற்றும் மதுபாட்டில்கள் கிடந்தன. பாறாங்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொலை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் 15.வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையான வாலிபர் யார் ? கொலை செய்த நபர்கள் யார் ? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று பட்டப்பகலில் கிளி ஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இன்று அதிகாலையில் மற்றொரு கொலை நடந்திருப்பது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×