search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளகோவில் வடமாநில மில் தொழிலாளி தற்கொலை
    X

    வெள்ளகோவில் வடமாநில மில் தொழிலாளி தற்கொலை

    வெள்ளகோவில் வடமாநில மில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நாட்ராயசாமி கோவில் அருகே தனியார் மில் உள்ளது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சதானந்த தாஸ் (வயது 26) என்பவரும் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மில் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சதானந்த தாசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதானந்த தாஸ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×