search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெய்ட்டி புயல் - காசிமேடு மீனவர்கள் 300 பேர் ஆந்திராவில் தஞ்சம்
    X

    பெய்ட்டி புயல் - காசிமேடு மீனவர்கள் 300 பேர் ஆந்திராவில் தஞ்சம்

    பெய்ட்டி புயல் காரணமாக காசிமேடு மீனவர்கள் 300 பேர் ஆந்திராவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். #KasimeduFishermen

    சென்னை:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகிறார்கள்.

    பெய்ட்டி புயல் காரணமாக கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரை திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் குறைந்த தூரத்தில் இருந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

    ஆனால் ஆழ்கடலில் மீன்பிடித்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகில் இருந்த 300 மீனவர்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களை அருகில் உள்ள ஆந்திரா பகுதிக்கு செல்லுமாறு வயர்லெஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காசிமேடு மீனவர்கள் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபட்டினம் அருகே பத்திரமாக கரை சேர்ந்தனர்.

    300 மீனவர்கள் அங்கு தஞ்சம் அடைந்து உள்ளனர். காசிமேடு மீனவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுதா தெரிவித்தார். #KasimeduFishermen

    Next Story
    ×