search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் பன்றிகாய்ச்சலுக்கு இளம்பெண் பலி
    X

    சேலத்தில் பன்றிகாய்ச்சலுக்கு இளம்பெண் பலி

    சேலத்தில் பன்றிகாய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி புவனேஷ்வரி (வயது 39). இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்ட பின்பும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் நேற்று முன்தினம் புவனேஷ்வரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

    அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் தொற்றி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து புவனேஷ்வரிக்கு பன்றி காய்ச்சல் குணமடைய ஊசி மருந்துகள் செலுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×