என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஆண்டிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
By
மாலை மலர்3 Dec 2018 10:04 AM GMT (Updated: 3 Dec 2018 10:04 AM GMT)

ஆண்டிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா (வயது 26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
முருகேசன் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் பிரச்சினை உருவானது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த நிவேதிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நிவேதிதாவின் சகோதரர் பாண்டித்துரை க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
கம்பம் நெல்குத்தி புளியமரம் தெருவைச் சேர்ந்தவர் பகவதி மனைவி மகாலெட்சுமி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மகாலெட்சுமி கணவனை பயமுறுத்த தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தார். இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா (வயது 26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
முருகேசன் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் பிரச்சினை உருவானது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த நிவேதிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நிவேதிதாவின் சகோதரர் பாண்டித்துரை க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
கம்பம் நெல்குத்தி புளியமரம் தெருவைச் சேர்ந்தவர் பகவதி மனைவி மகாலெட்சுமி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மகாலெட்சுமி கணவனை பயமுறுத்த தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தார். இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
