search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொட்டாம்பட்டி அருகே விபத்து: கோழி வியாபாரி பலி
    X

    கொட்டாம்பட்டி அருகே விபத்து: கோழி வியாபாரி பலி

    கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கோழி வியாபாரி பலியானார். வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    மேலூர்:

    கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் செல்லம் (வயது 58). கோழி வியாபாரி. இவர் சிலம்புத்தேவன் (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோழிகளை ஏற்றிக்கொண்டு சிங்கம்புணரிக்கு இன்று காலை புறப்பட்டார்.

    காரியேந்தல்பட்டி என்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றபோது பின்னால் ஒரு வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட செல்லம் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர்.

    ஆனால் அதற்குள் செல்லம் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் டிரைவர் திண்டுக்கல் ரவி வர்மாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×