என் மலர்
செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே லாரி மோதி மாணவர் உள்பட 2 பேர் பலி
நாட்டறம்பள்ளி அருகே நடந்த விபத்தில் குடியாத்தம் மாணவர் உள்பட 2 பேர் இறந்தனர்.
நாட்டறம்பள்ளி:
குடியாத்தம் சென்றாம் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது24). பெங்களுருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (24). சென்னையில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் இன்று காலை பெங்களுருவில் இருந்து புறப்பட்டு குடியாத்தத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். நாட்டறம்பள்ளி கல்லாறு என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், ராஜேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இது குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






