என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே வாய்க்கால் மறுபக்கம் நீந்தி சென்ற வாலிபர் பலி
    X

    பெருந்துறை அருகே வாய்க்கால் மறுபக்கம் நீந்தி சென்ற வாலிபர் பலி

    பெருந்துறை அருகே வாய்க்கால் மறுபக்கம் நீந்தி சென்ற வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள முனியப்ப பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 39). தனியார் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் பணிபுரிந்து வந்தார்.

    நேற்று மாலை இவர் நண்பர்களுடன் பெருந்துறை வந்தார். அப்போது கீழ்பவானி வாய்க் காலில் தண்ணீர் பாய்ந்து செல்வதை கண்டு அதில் இறங்கி குளிக்க ஆசைப்பட்டனர்.

    பெருந்துறை அடுத்த திருவாச்சி கீழ் பவானி வாய்க்காலில் இறங்கி நண்பர்களுடன் சண்முகம் குளித்தார்.

    அப்போது சண்முகம் வாய்க்காலின் எதிரே மறு கரைக்கு நீந்தி சென்றார். வாய்க்காலின் நடுப்பகுதிக்கு சென்றபோது அதிகமாக சென்ற தண்ணீர் திடீரென சண்முகத்தை இழுத்து சென்றது.

    அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரை அவரது நண்பர்கள் தேடி பார்த்தனர். கிடைக்க வில்லை. இதனால் கதறி அழுத நண்பர்கள் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    வாய்க்காலில் குதித்து தீயணைப்பு வீரர்கள் தேடினர். சுமார் 3 மணி நேரம் போராடி வாய்க்காலில் சிறிது தூரம் தள்ளி சண்முகத்தின் உடலை மீட்டனர்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சண்முகத்துக்கு கலையரசி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    Next Story
    ×