search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளத்தில் குடும்ப தகராறில் பெண் மாயம்
    X

    பெரியகுளத்தில் குடும்ப தகராறில் பெண் மாயம்

    பெரியகுளத்தில் குடும்பத்தகராறில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் வடகரை ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி லட்சுமி(வயது34). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி கோவித்துக்கொண்டு காரைக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார்.

    உறவினர்கள் சமரசப்படுத்தி மீண்டும் பெரியகுளத்திற்கு அனுப்பி வைப்பார்கள். சம்பவத்தன்றும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் லட்சுமி வீட்டைவிட்டு வெளியேறினார்.

    ஆனால் லட்சுமி தாய் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமி மாயமானாரா? அல்லது யாரேனும் கடத்திச்சென்றனரா? என்று விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×