என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளத்தில் குடும்ப தகராறில் பெண் மாயம்
Byமாலை மலர்25 Nov 2018 1:41 PM GMT (Updated: 25 Nov 2018 1:41 PM GMT)
பெரியகுளத்தில் குடும்பத்தகராறில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் வடகரை ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி லட்சுமி(வயது34). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி கோவித்துக்கொண்டு காரைக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார்.
உறவினர்கள் சமரசப்படுத்தி மீண்டும் பெரியகுளத்திற்கு அனுப்பி வைப்பார்கள். சம்பவத்தன்றும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் லட்சுமி வீட்டைவிட்டு வெளியேறினார்.
ஆனால் லட்சுமி தாய் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமி மாயமானாரா? அல்லது யாரேனும் கடத்திச்சென்றனரா? என்று விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X