என் மலர்
செய்திகள்

கஜா புயல் நிவாரணம்: திருமாவளவன், ஏ.சி.சண்முகம் நிதி உதவி- முதல்வரிடம் வழங்கினர்
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதல்வரிடம் திருமாவளவன், ஏ.சி.சண்முகம் நிதிஉதவி வழங்கினர். #gajacyclone #thirumavalavan #acshanmugam
சென்னை:
‘கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அதிகமானோர் பணம் அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தனது மகன் ஏ.சி.எஸ்.அருண்குமாருடன் சேர்ந்து சந்தித்து ரூ.20 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினர்.
நடிகர் விவேக் ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். #gajacyclone #thirumavalavan #acshanmugam
Next Story






