search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்வதாக பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய டிரைவர் கைது
    X

    திருமணம் செய்வதாக பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய டிரைவர் கைது

    மாதவரம் அருகே திருமணம் செய்தவதாக கூறி பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    செங்குன்றம்:

    மாதவரம் பால்பண்ணை மாத்தூர் இடைமா நகரைச் சேர்ந்த 21 வயதுடைய பட்டதாரி பெண்ணும், கொசப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டிரைவர் அசோகனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண் மாதவரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அசோகன் தன்னை காதலித்து திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக கூறி இருந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குபதிவு செய்து அசோகனை கைது செய்தார். #tamilnews
    Next Story
    ×