என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலையம் அருகே பெண் நகை பறிப்பு
    X

    விமான நிலையம் அருகே பெண் நகை பறிப்பு

    விமான நிலையம் அருகே பெண் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ராயப்பேட்டை பீட்டர் சாலையில் குடியிருப்பவர் சுரேஷ். ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி தேவி புவனேஸ்வரி. டி.ஜி.பி. அலுவலக அதிகாரி.

    நேற்று சுரேஷ்-தேவி புவனேஸ்வரி இருவரும் பொழிச்சலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு இரவு வீடு திரும்பினார்கள்.

    இரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் மீனம்பாக்கம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. சுரேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தேவி புவனேஸ்வரி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் வந்தனர். திடீர் என்று தேவி புவனேஸ்வரியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.


    Next Story
    ×