search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்வாரிலால் புரோகித் போல மோசமான கவர்னரை பார்த்ததே இல்லை- வைகோ
    X

    பன்வாரிலால் புரோகித் போல மோசமான கவர்னரை பார்த்ததே இல்லை- வைகோ

    தமிழக வரலாற்றில் பன்வாரிலால் புரோகித் போல மோசமான கவர்னரை பார்த்ததே இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #MDMK #vaiko #Banwarilalpurohit
    சென்னை:

    ஐகோர்ட்டு நீதிபதியாக பி.புகழேந்தி இன்று பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துக் கொண்டார். வக்கீல் சீருடையில் வந்திருந்த வைகோ, நீதிபதி புகழேந்திக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீதிபதியாக புகழேந்தி பதவியேற்ற இந்த நாள் திராவிட இயக்கத்தின் சமூக நீதிக்கான நாளாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றமே செய்யாத நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் நரக வேதனை அனுபவித்து வருகின்றனர். ஆனால், உயிரோடு 3 அப்பாவி மாணவிகளை எரித்துக் கொலை செய்த 3 அ.தி.மு.க.க்காரர்களை, தமிழக அரசு முன் கூட்டியே விடுதலை செய்துள்ளது.

    இந்த 3 பேரை விடுதலை செய்வதற்காகத்தான், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன் கூட்டியே விடுதலை செய்வதாக தமிழக அரசு இதுவரை நாடகம் ஆடியுள்ளது.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி நவ.24-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்.


    நீதிக்கு எதிராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார். பிரதமர் மோடியின் ஏஜெண்டாக கவர்னர் செயல்படுகிறார். தமிழக வரலாற்றில், இப்படியொரு மோசமான கவர்னரை பார்த்ததே இல்லை.

    இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #vaiko #Banwarilalpurohit
    Next Story
    ×