search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
    X

    கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

    கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயண மூர்த்தி மற்றும் சிப்காட் போலீசார் புது கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலீஸ்வரன் ஏரிகரையோரம் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்ற ஒரு பெண் உள்பட 3 பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.

    அவர் புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன் கண்டிகையைச் சேர்ந்த வாலிபர் தங்கமணி, தப்பி ஓடியது அவரது தாய் சாந்தி, தம்பி நடராஜன் என்பது தெரிய வந்தது.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×