search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து 7 பேர் காயம்
    X

    ராயக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து 7 பேர் காயம்

    ராயக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது கருக்கனஹள்ளி. இங்கிருந்து மின் கம்பங்களை ஏற்றிக் கொண்டு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பிள்ளாரி அக்ரஹாரம் நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த டிராக்டர் பிள்ளாரி அக்ரஹாரம் பக்கமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் கும்மனூர் அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்த முனியப்பன், பாலக்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த தனபால் (42), சிதம்பரம் (24), சென்னப்பன் (25), சைமன் (25), ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டிநாயக்கனஅள்ளியை சேர்ந்த சுரேஷ் (22), முகலூரை சேர்ந்த மூர்த்தி (25) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான டிராக்டரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×