என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் அருகே வீட்டில் விளையாடியபோது புடவை கழுற்றில் சுற்றி பள்ளி மாணவி பலி
Byமாலை மலர்27 Oct 2018 10:57 AM GMT (Updated: 27 Oct 2018 10:57 AM GMT)
வேலூர் அருகே வீட்டில் விளையாடியபோது புடவை கழுற்றில் சுற்றி பள்ளி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் ஆர்.என்.பாளையம் 4-வது தெருவை சேர்ந்தவர் நிசாம். இவருக்கு 5 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நிசாமின் 2-வது மகள் பவுசியா (வயது 9). இவர், 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டில் இருந்த பவுசியா, புடவையில் தொங்கவிடப்பட்டிருந்த தூளியில் உட்கார்ந்து விளையாடினார். அப்போது புடவை கழுற்றில் சுற்றி இறுகியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
மூச்சு பேச்சின்றி கிடந்த மகளை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மகளை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் பவுசியா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X