search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவொற்றியூரில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    திருவொற்றியூரில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    திருவொற்றியூரில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஜோதி நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் பழனியப்பன், என்ஜினீயர். இவர் கடந்த 17-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை பழனியப்பன் திரும்பி வந்தபோது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதேபோல் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது காரை அங்குள்ள போலீஸ் பூத் அருகே நிறுத்தி இருந்தார். மர்ம நபர்கள் காரில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள டேப் ரிக்கார்டரை திருடி சென்று விட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர்.

    Next Story
    ×