search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் இருந்து கோவை வந்தபோது கெமிக்கல் சப்ளையர் விபத்தில் பலி
    X

    திருப்பூரில் இருந்து கோவை வந்தபோது கெமிக்கல் சப்ளையர் விபத்தில் பலி

    திருப்பூரில் இருந்து கோவை வந்தபோது கெமிக்கல் சப்ளையர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரநேசன் (வயது49). இவரது மனைவி லதாமகேஸ்வரி (42). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சந்திரநேசன் திருப்பூர் முத்து நகரில் தங்கி பனியன் கம்பெனிகளுக்கு கெமிக்கல் சப்ளை செய்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து சின்னியம்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திருப்பூர்- சின்னியம்பாளையம் இடையே உள்ள தென்னம்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயங்களுடன் கிடந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×