என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
90 சதவீத அதிமுக தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்- தினகரன் சொல்கிறார்
பொள்ளாச்சி:
முன்னாள் அமைச்சர் தாமோதரன் கடந்த சில நாட்களுக்கு முன் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா பொள்ளாச்சி அருகே கோலார் பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் அமைச்சர் தாமோதரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் அ.ம.மு.க.வில் இணைந்தனர். விழாவில் தினகரன் பேசியதாவது-
தமிழகத்தில் ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதை நிருபிக்கின்ற வகையில் 90 சதவீதம் தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் இருந்து விலகி எங்கள் இயக்கத்தில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சண்முகவேல், முன்னாள் எம்.பி. சுகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் செல்வி பத்மினி, ராஜ மாணிக்கம், பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. செயலாளர் மயில்சாமி, முன்னாள் நகர செயலாளர் வக்கீல் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் டி.டி.வி. தினகரன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-
எதற்காக இந்த கட்சி தொடங்கப்பட்டது என்று உங்களுக்கே தெரியும்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு ஆளும் கட்சி, எதிர் கட்சிகளை தோற்கடித்து குக்கர் சின்னத்தில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம்.
நமது கட்சி நன்கு வளர்ந்து வருகிறது. தற்போது ஆட்சி துரோகிகள் கையில் உள்ளது. ஆட்சியாளர்கள் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் தங்களது பதவியை மட்டும் காப்பாற்றி வருகிறார்கள்.
அம்மாவின் கட்சியை காப்பாற்றி ஆக வேண்டும். அம்மாவின் இரட்டை இலை சின்னம் துரோகிகள் கையில் உள்ளது. தமிழகத்தில் தலை நிமிர்ந்து நிற்கவும், எந்த தேர்தல் வந்தாலும் சிறந்த ஆட்சி அமைந்திட குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்.
வெள்ளகோவில் பகுதியில் உள்ள வட்டமலை கரை ஓடை மூலம் 6 ஆயிரம் ஏக்கர் பூமி பாசன வசதி பெறவும், வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள கோவிலில் ஒரு கல்லூரி தொடங்கப்படும்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார். #dinakaran #admk #edappadipalanisamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்