என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள்- தங்க தமிழ்ச்செல்வன் தாக்கு
    X

    எடப்பாடி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள்- தங்க தமிழ்ச்செல்வன் தாக்கு

    முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள் என்று தங்கதமிழ்ச்செல்வன் பேசினார். #TTVDhinakaran #ThangaTamilselvan #Edappadipalaniswami #ADMK
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களான நாங்கள் நட்புக்கு மதிப்பு கொடுத்து டி.டிவி.தினகரன் அணியில் இருக்கிறோம். முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள். ஊழல் வாதிகள். அனைத்து அமைச்சர்களும் ஊழல்களில் ஜொலிக்கின்றனர். ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் வீட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளார்கள்.


    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 3 மாதத்தில் முடியும் என்றனர். தற்போது கமி‌ஷன் அமைக்கப்பட்டு 1 வருடமாகி விட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மேற்கண்டவாறு தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். #TTVDhinakaran #ThangaTamilselvan #Edappadipalaniswami #ADMK
    Next Story
    ×