search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆற்காட்டில் லோடு ஆட்டோ- லாரி மோதல்- வாலிபர் பலி
    X

    ஆற்காட்டில் லோடு ஆட்டோ- லாரி மோதல்- வாலிபர் பலி

    ஆற்காட்டில் லோடு ஆட்டோ மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரியில் கலவை ரோடு கனியனூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமரேசன் (வயது 26). கனியனூர் பெரிய ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் பாலாஜி (28). இருவரும் லோடு ஆட்டோவில் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை வேலூரில் இருந்து ஆற்காட்டிற்கு லோடு ஏற்றிக் கொண்டு சென்றனர்.

    ஆட்டோவை, பாலாஜி ஓட்டினார். பக்கத்தில் குமரேசன் உட்கார்ந்திருந்தார். மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் சென்றபோது, ஆட்டோ மீது பின்னால்வந்த லாரி மோதியது.

    இதில் சாலையின் தடுப்புச்சுவரில் ஆட்டோ மோதி நொறுங்கியது. குமரேசன், பாலாஜி ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இருவரும் மீட்கப்பட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். பாலாஜி மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    இது குறித்து, ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×