என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![காரமடையில் 2-வது திருமணம் செய்த இளம்பெண் கொலை காரமடையில் 2-வது திருமணம் செய்த இளம்பெண் கொலை](https://img.maalaimalar.com/Articles/2018/Sep/201809141510009725_second-marriage-woman-killed-in-karamadai_SECVPF.gif)
காரமடையில் 2-வது திருமணம் செய்த இளம்பெண் கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
காரமடை:
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கணு வாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 35).
இவர்களுக்கு மணிகண்டன்(7), சிவா(5) என்ற 2 மகன்கள் உள்ளனர். சின்னராஜ் கடந்த சில வருடங்களுக்கு இறந்து விட்டார். அதன் பிறகு மாரியம்மாள் அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது அங்கு வேலை பார்த்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மாரியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1 வருடத்துக்கு முன்பு மாரியம்மாள் அந்த வாலிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்
இந்நிலையில் மாரியம்மாள் காரமடையை அடுத்த தோலம்பாளையம் புதூர் பகுதியில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து அவரது தாய் செல்வி அங்கு விரைந்து சென்றார். மாரியம்மாளின் கழுத்தில் ரத்தக் காயங்கள் இருந்தது.
உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரியம்மாள் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மாரியம்மாளின் கழுத்தில் ரத்தக்காயங்கள் இருந்ததால் அவரை யாரோ மர்மநபர்கள் கழுத்தை நெரித்தோ அல்லது ஆயுதங்களால் தாக்கியோ கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)