search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு- மாணவர்கள், பொதுமக்கள் அவதி
    X

    வேலூர் மாவட்டத்தில் தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு- மாணவர்கள், பொதுமக்கள் அவதி

    வேலூர் மாவட்டத்தில் தினமும் 3 மணி நேரம் மின் தடை ஏற்படுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    சென்னை அனல் மின் நிலையில் 1410 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது. வழக்கமாக இந்த சமயங்களில் கிடைக்க கூடிய காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலையில் 1 மணி முதல் மாலை 1 மணி நேரம் இரவு 1 மணி நேரம் என 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்னூர், விண்ணமங்கலம், வடகரை, மாராபட்டு ஆகிய பகுதிகளில் கடந்த 3 வாரமாக பகலில் 2 மணி நேரமும் இரவில் 3 மணி நேரமும் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    வாணியம்பாடியில் பகலில் 2 மணி நேரமும் இரவில் 1 மணி நேரமும் மின் வெட்டு ஏற்படுகிறது. ஆலங்காயம், திம்மாம்பேட்டை, அம்பலூர் பகுதிகளில் தினமும் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடுகிறது.

    அரக்கோணம் பகுதியில் கடந்த 1 மாதமாக 3 மணி நேரத்திற்கும் மேல் தொடர் மின் தடை ஏற்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரமும் முறையாக வழங்கபடுவதில்லை இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    வாலாஜா பகுதியில் கடந்த 2 வாராமாக 1 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, பெருந்துரைபட்டு, வாணாபுரம், அகரம்பள்ளிபட்டு சதாகுப்பம் பகுதிகளில் பகலில் 4 மணி நேரமும், இரவில் 2 மணி நேரமும் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் காலாண்டு தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அவதியடைந்துள்ளனர், பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மின் வெட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    Next Story
    ×