என் மலர்
செய்திகள்

டி.கல்லுப்பட்டியில் பெற்றோர் பிரிந்த விரக்தியில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
டி.கல்லுப்பட்டியில் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வந்ததால் விரக்தி அடைந்த மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர்:
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஜோசியர் தெருவை சேர்ந்தவர் லோகலட்சுமி, அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு வருடமாக கணவர் சீனிவாசனை பிரிந்து மகன் விஜய் பிரசன்னாவுடன் (வயது 17). வாழ்ந்து வருகிறார்.
விஜய் பிரசன்னா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பெற்றோர் பிரிந்து வாழ்ந்ததால் அவர் விரக்தியுடன் காணப்பட்டார். தந்தையுடன் சேர்ந்து வாழலாம் என்று அடிக்கடி தாயிடம் விஜய் பிரசன்னா கூறி வந்ததாக தெரிகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த விஜய் பிரசன்னா நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பெற்றோர் பிரிந்த விரக்தியில் மகன் தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஜோசியர் தெருவை சேர்ந்தவர் லோகலட்சுமி, அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு வருடமாக கணவர் சீனிவாசனை பிரிந்து மகன் விஜய் பிரசன்னாவுடன் (வயது 17). வாழ்ந்து வருகிறார்.
விஜய் பிரசன்னா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பெற்றோர் பிரிந்து வாழ்ந்ததால் அவர் விரக்தியுடன் காணப்பட்டார். தந்தையுடன் சேர்ந்து வாழலாம் என்று அடிக்கடி தாயிடம் விஜய் பிரசன்னா கூறி வந்ததாக தெரிகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த விஜய் பிரசன்னா நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பெற்றோர் பிரிந்த விரக்தியில் மகன் தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story






