search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருகிற 12-ந்தேதி திருமணம் - நகை, பணத்துடன் புதுப்பெண் மாயம்
    X

    வருகிற 12-ந்தேதி திருமணம் - நகை, பணத்துடன் புதுப்பெண் மாயம்

    வருகிற 12-ந்தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் நகை, பணத்துடன் புதுப்பெண் மாயமான சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகள் கார்த்திகை ஜோதி. பட்டதாரி. இவருக்கும் சிவகாசி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 12-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந் நிலையில் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வடிவேலு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் கார்த்திகை ஜோதி மட்டும் இருந்தார். பின்னர் அழைப்பிதழை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கார்த்திகை ஜோதியை காணவில்லை.

    மேலும் வீட்டில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகள், ரூ.48 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் துணிமணிகள் ஆகியவையும் மாயமாகி இருந்தன. அக்கம்பக்கம் உள்ளிட்ட உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேலு இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை குமந்தாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வம், அவரது மனைவி சிவகாமி, அவர்களது மகன் சூர்யா (23) ஆகியோர் சேர்ந்து கடத்தி உள்ளதாக தெரிகிறது என கூறியிருந்தார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புதுப்பெண் கடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×