என் மலர்

    செய்திகள்

    முக அழகிரி பேரணி குறித்து பதிலளிக்க துரைமுருகன் மறுப்பு
    X

    முக அழகிரி பேரணி குறித்து பதிலளிக்க துரைமுருகன் மறுப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மு.க.அழகிரி அமைதிப் பேரணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கைகளை உயர்த்தியபடி நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். #DMK #DuraiMurugan #MKAlagiri
    வேலூர்:

    முன்னாள் அமைச்சர் துரைமுருகன் திமுக பொருளாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இன்று அவரது சொந்த ஊரான காட்பாடிக்கு வந்தார்.

    அவருக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்த பொதுக்குழு, செயற்குழு, தி.மு.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் ரூ. 1 கோடி தேர்தல் நிதி வழங்கியுள்ளனர். இதை போல மற்ற மாவட்டங்களிலும் நிதி வழங்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் குட்கா சம்பந்தமாக சோதனை நடத்த வேண்டும். இது தாமதமானது தான் என்றாலும் வரவேற்கதக்கது.


    கர்நாடக மாநிலம் மேகதாதுவில் எப்படியாவது அணை கட்ட வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒற்றைகாலில் நிற்கிறார்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் அதனை தடுத்து நிறுத்தினோம். மேகதாதுவில் அணைகட்டினால் காவிரியில் வரும் கொஞ்ச தண்ணீரும் நின்று விடும். இது மிகப்பெரிய ஆபத்து. தமிழக அரசு இதனை முழு மூச்சோடு எதிர்க்க வேண்டும்.

    பாலாற்றில் தந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. தற்போது ஆற்றுக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய்களிலும் அணை கட்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தோடு தான் இது நடக்கிறதா. பொதுப் பணித்துறை அமைச்சர் விஜயவாடாவுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அணைகட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மு.க.அழகிரி அமைதிப் பேரணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது துரைமுருகன் கைகளை உயர்த்தியபடி நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். #DMK #DuraiMurugan #MKAlagiri
    Next Story
    ×