என் மலர்
செய்திகள்

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஐஸ் வியாபாரி பலி
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஐஸ் வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை விளார்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 58). ஐஸ் வியாபாரி.
இந்நிலையில் நேற்று குணசேகரன் கந்தர்வகோட்டையில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருக்கானூர் பட்டி கடை தெருவில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை விளார்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 58). ஐஸ் வியாபாரி.
இந்நிலையில் நேற்று குணசேகரன் கந்தர்வகோட்டையில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருக்கானூர் பட்டி கடை தெருவில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story