என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
Byமாலை மலர்9 Aug 2018 8:45 AM GMT (Updated: 9 Aug 2018 8:45 AM GMT)
காதல் திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவி, வாலிபர் பாதுகாப்பு வழங்க கோரி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சினி. இவர் கடலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ரஞ்சனிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இரு வரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் ரஞ்சினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஞ்சினியும், சதீஷ்குமாரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த விபரம் ரஞ்சனியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை ரஞ்சினியும், சதீஷ்குமாரும் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது ரஞ்சனி புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும், சதீஷ்குமாரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சினி. இவர் கடலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ரஞ்சனிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இரு வரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் ரஞ்சினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஞ்சினியும், சதீஷ்குமாரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த விபரம் ரஞ்சனியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை ரஞ்சினியும், சதீஷ்குமாரும் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது ரஞ்சனி புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும், சதீஷ்குமாரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X