search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
    X

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

    காதல் திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவி, வாலிபர் பாதுகாப்பு வழங்க கோரி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சினி. இவர் கடலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ரஞ்சனிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இரு வரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் ரஞ்சினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஞ்சினியும், சதீஷ்குமாரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த விபரம் ரஞ்சனியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ரஞ்சினியும், சதீஷ்குமாரும் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது ரஞ்சனி புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும், சதீஷ்குமாரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×