search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலையில் கல்லை போட்டு பெண்ணை கொல்ல முயற்சி- போலீசார் விசாரணை
    X

    தலையில் கல்லை போட்டு பெண்ணை கொல்ல முயற்சி- போலீசார் விசாரணை

    vஈரோட்டில் பெண்ணை தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு, தெற்கு பள்ளம், ஜீவாநகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த 3 வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவரது மனைவி மாதம்மாள் (வயது 42). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மாதம்மாள் அங்குள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதம்மாள் திடீரென மாயமானார். அவரது பிள்ளைகளும், உறவினர்களும் பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    ஆனால் மாதம்மாளை காணவில்லை. எனவே அவர் மாயமானது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் மாதம்மாளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஜீவா நகர் அருகே முட்புதர் பகுதியில் ஒருவருடைய முனகல் சத்தம் கேட்டது.

    இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் முனகல் சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பெண் ரத்த காயங்களுடன் கிடந்தார்.

    இது பற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த பெண் மாயமான மாதம்மாள் என்பது தெரியவந்தது. அவரது தலையில் யாரோ கல்லை தூக்கி போட்டு அவரை கொல்ல முயன்றுள்ளனர்.

    போலீசார் மாதம்மாளை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாதம்மாள் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாதம்மாளின் தலையில் கல்லை போட்டு அவரை கொல்ல முயன்றவர் யார்? என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கினர்.

    மாதம்மாள் படுகாயத்துடன் கிடந்த முட்புதர் பகுதியில் மது பாட்டில்கள் கிடந்தது. எனவே அந்த பகுதியில் இருந்து மது குடித்தவர்கள் தான் மாதம்மாளை கொல்ல முயன்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    அந்த இடத்துக்கு மாதம்மாள் சென்றது ஏன்? என்பதும் தெரியவில்லை. அது தொடர்பாகவும், மாதம்மாள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் வேலை பார்க்கும் தர்மபுரி பகுதியை சேர்ந்தவருக்கும், மாதம்மாளுக்கும் பழக்கம் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அந்த நபரை போலீசார் தேடினர். ஆனால் அவரை காணவில்லை. வேலைக்கும் வரவில்லை. அவர் தலைமறைவாக உளளர். எனவே அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    அந்த நபரை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். அவர் பிடிபட்டால் மாதம்மாளை கொல்ல முயன்றது யார்? என்பது பற்றிய மேல் விவரம் தெரியவரும்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×