என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலத்தூர் அருகே மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 30 மாணவர்கள் உயிர் தப்பினர்
Byமாலை மலர்16 July 2018 10:37 AM GMT (Updated: 16 July 2018 10:37 AM GMT)
விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்றபோது ஆலத்தூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 மாணவர்கள் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர்.
திருப்போரூர்:
திருப்போரூர், செங்கல்பட்டு சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இன்று காலை கூவத்தூரில் உள்ள பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருப்போரூர் அரசு பள்ளியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை மினி லாரியில் அழைத்து சென்றனர். உடன் உடற்கல்வி ஆசிரியர் அனபரசனும் சென்றார்.
ஆலத்தூர் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் சிக்கிய மாணவர்கள் கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அவ்வழியே சென்றவர்கள் லாரியில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டனர்.
இடிபாடுகளில் சிக்கிய ஆலத்தூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ் ராஜின் ஒரு கை துண்டானது. மேலும் 30 மாணவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர். ஆசிரியர் அன்பரசனுக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது.
அவர்கள் அனைவரும் உடனடியாக கேளம் பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கை துண்டான மாணவர் பிரகாஷ்ராஜ் ஸ்டான்லி அரசு ஆஸ்த்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திருப்போரூர் அரசு பள்ளி முன்பு திரண்டனர். பாதுகாப்பு இல்லாமல் மினி லாரியில் மாணவர்களை அழைத்து சென்றதாக ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் கலைந்து சென்றனர்.
திருப்போரூர், செங்கல்பட்டு சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இன்று காலை கூவத்தூரில் உள்ள பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருப்போரூர் அரசு பள்ளியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை மினி லாரியில் அழைத்து சென்றனர். உடன் உடற்கல்வி ஆசிரியர் அனபரசனும் சென்றார்.
ஆலத்தூர் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் சிக்கிய மாணவர்கள் கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அவ்வழியே சென்றவர்கள் லாரியில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டனர்.
இடிபாடுகளில் சிக்கிய ஆலத்தூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ் ராஜின் ஒரு கை துண்டானது. மேலும் 30 மாணவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர். ஆசிரியர் அன்பரசனுக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது.
அவர்கள் அனைவரும் உடனடியாக கேளம் பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கை துண்டான மாணவர் பிரகாஷ்ராஜ் ஸ்டான்லி அரசு ஆஸ்த்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திருப்போரூர் அரசு பள்ளி முன்பு திரண்டனர். பாதுகாப்பு இல்லாமல் மினி லாரியில் மாணவர்களை அழைத்து சென்றதாக ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X