search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
    X

    மதுரையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை விளாங்குடி காமாட்சிநகரைச் சேர்ந்த அனுசுயாதேவி (வயது19)க்கும், கணேசன் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடை பெற்றது. அதன் பிறகு சமயநல்லூர் அருகே உள்ள தோடனேரியில் கணவருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அனுசுயாதேவி திடீரென மாயமானார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் விசாரணையில் பாலமுருகன் என்பவருடன் அனுசுயாதேவி சென்றிருப்பது தெரியவந்தது அவருடன் கள்ளக்காதல் இருப்பதும் உறுதியானது.

    தொடர்ந்து போலீசாரால் மீட்கப்பட்ட அனுசுயாதேவி விளாங்குடியில் உள்ள தாயார் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×