search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி
    X

    நாமக்கல் அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

    நாமக்கல் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலாயுதபாளையம் பகுதியை சேர்ந்தவர் மதுபாலன். இவர் பொட்டலாபுரத்தில் வி.ஏ.ஓவாக உள்ளார். இவரது மனைவி கோசலை. இவர்களுக்கு வைணவ ரோசன் (4) என்ற மகனும், தமிழினி (2) என்ற மகளும் உள்ளனர். மதுபாலன் இன்று காலை குடும்பத்துடன் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் மனைவியின் ஊரான துத்திக்குளத்திற்கு பை-பாஸ் ரோட்டில் சென்றனர். அப்போது சென்னையில் இருந்து கரூரை நோக்கி சென்ற கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மதுபாலன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்து குறித்து அருகில் உள்ளவர்கள் பார்த்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது 4 வயது சிறுவன் வைணவ ரோசன் பலியானது தெரியவந்தது. காயமடைந்த மற்றவர்களை மீட்டு நாமக்கலில் உள்ள தனியார் ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    வைணவ ரோசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த கங்காசலத்தை பிடித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×