search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலம் அருகே தாயை அடித்து கொன்று கொல்லையில் புதைத்த மகன்
    X

    குத்தாலம் அருகே தாயை அடித்து கொன்று கொல்லையில் புதைத்த மகன்

    குத்தாலம் அருகே குடும்ப பிரச்சனையில் தாயை அடித்து கொன்ற மகன், வீட்டின் பின்புறத்தில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வாளவராயன்குப்பம் கீழ தெருவை சேர்ந்தவர் முத்தையன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி உய்யம்மாள் (வயது 80). இவரது மகன் கலியமூர்த்தி (60).

    கலியமூர்த்திக்கு பூசம் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்கள் உள்ளனர். இதில் மகன் இறந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

    இந்த நிலையில் உய்யம்மாளுக்கும், அவரது மருமகள் பூசத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அப்போது கலியமூர்த்தி மனைவிக்கு ஆதரவாக இருந்து தனது தாயை தாக்குவாராம்.

    இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உய்யம்மாளுக்கும், பூசத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பெற்ற தாய் என்றும் பாராமல் அடித்து உதைத்தார். அப்போது நிலை குலைந்து உய்யம்மாள் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு அங்கேயே இறந்து விட்டார். தாய் இறந்ததை கண்டு கலியமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனே வெளியே தெரியாமல் வீட்டிலேயே தாய் உடலை புதைத்து விட முடிவு செய்தார்.

    பின்னர் வீட்டின் பின்புறம் கொல்லையில் குழி தோண்டி தாயின் உடலை புதைத்து விட்டார். பிறகு அவர் வழக்கம் போல் வெளியே உள்ளவர்களிடம் பேசி பழகி வந்தார்.

    இந்த நிலையில் உய்யம்மாளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவி தொகை வரும். இதேபோல் இந்த மாதத்துக்கான உதவி தொகை வந்தது. உய்யம்மாள் இறந்து விட்டதால் உதவிதொகை வாங்க முடியவில்லை. இதனால் உய்யம்மாளை எங்கே? என்று அக்கம்பக்கத்தினர் கலியமூர்த்தியிடம் கேட்க தொடங்கினர். அவர் தாய்க்கு உடம்புக்கு சரியில்லை. இதனால் வீட்டிலேயே இருக்கிறார் என்று கூறி சமாளித்து பார்த்தார்.

    இந்த நிலையில் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு கேள்விகள் கேட்டதால் வேறுவழியின்றி ஊர் நாட்டாண்மை சுப்பையா என்பவரை சந்தித்து தனது தாய் உய்யம்மாளை கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவத்தை கூறினார்.

    இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பெரம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், கலியமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். தாயை கொன்றதை அவர் ஒப்பு கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தேன்மொழி முன்னிலையில் பிணத்தை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    பெற்ற தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×