search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரம் இல்லாமல் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது - வெளிநடப்புக்கு பின் ஸ்டாலின் பேட்டி
    X

    அதிகாரம் இல்லாமல் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது - வெளிநடப்புக்கு பின் ஸ்டாலின் பேட்டி

    லோக் ஆயுக்தா மசோதா மீதான விவாதம் தமிழக சட்டசபையில் நடந்து வரும் நிலையில், பல அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பிய திமுக அமைச்சரின் விளக்கத்தில் திருப்தி அடையாததால் வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #Lokayukta #DMK
    சென்னை:

    தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். பிற்பகலில் மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது:-

    லோக் ஆயுக்தா கொண்டு வருவதில் திமுகவுக்கு மகிழ்ச்சி. இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் ஐகோர்ட் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும்.

    மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில் அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

    என அவர் கூறினர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத திமுக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், அதிகாரம் இல்லாத அமைப்பாக லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்றார்.
    Next Story
    ×