search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் நாட்டில் தவிக்கும் 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை- மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
    X

    ஈரான் நாட்டில் தவிக்கும் 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை- மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

    தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற சுமார் 21 மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கும் உடனடி நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.



    ஈரான் நாட்டில் தனியாரின் விசைப்படகில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற தமிழக மீனவர்களை கடத்தல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பயந்த நிலையில் இருந்த மீனவர்கள் தாங்கள் நாடு திரும்பினால் போதும் என்ற சூழலில் தங்களது குடும்பத்தினரோடு தொடர்புகொண்டு நடந்த பிரச்சினைகளை கூறியுள்ளனர். எனவே, மத்திய பா.ஜ.க. அரசு ஈரான் நாட்டோடு உடனடியாக தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை மீட்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, மீனவர்கள் வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தையும், பாஸ்போர்ட்டையும் ஈரான் நாட்டிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். இதற்கு, தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan
    Next Story
    ×