என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெவ்வேறு விபத்துக்கள்: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி
மதுரை:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (வயது40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளிக்குடியில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்தார்.
திருமங்கலம் 4 வழிச்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த போக்குவரத்து தடுப்பு வேலியில் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் ராமர் தூக்கி வீசப்பட்டார்.
பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமர் உயிர் இழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (45). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அணைக்கரைப்பட்டியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
சின்னவண்டாரி அருகே வந்தபோது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் அதே இடத்தில் துடிதுடித்து பலியானர்.
இதுகுறித்து அவரது மனைவி தங்கவேலு கொடுத்த புகாரின்பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்