search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் பணி முடிந்து வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு தற்கொலை
    X

    மதுரையில் பணி முடிந்து வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு தற்கொலை

    மதுரையில் பணி முடிந்து வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் மும்மூர்த்தி (வயது 37). இவர் சிலைமான் புளியங்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது மும்மூர்த்தி சோர்வாக காணப்பட்டார். குடும்பத்தினர் விசாரித்த போது எதுவும் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டு தூங்கச் சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் மும்மூர்த்தி தனது அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மும்மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட மும்மூர்த்திக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    போலீஸ் ஏட்டு மும்மூர்த்தி பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் பணிச்சுமை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ் ஏட்டு தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×