search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சநத்தத்தில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் மரணம்: ராகுல் காந்தி இரங்கல்
    X

    கச்சநத்தத்தில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் மரணம்: ராகுல் காந்தி இரங்கல்

    கச்சநத்தத்தில் சமீபத்தில் நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் பலியான சம்பவத்துக்கு இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் படுகொலை செய்யப்பட்ட சண்முகநாதன், சந்திரசேகர் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சண்முகநாதன், சந்திரசேகர் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தனித்தனியாக ராகுல் காந்தி அனுப்பிய இரங்கல் செய்தியில், “மரணம் நிகழ்ந்ததை அறிந்து துயரம் அடைந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை ஏற்றுகொள்ளுங்கள். இந்த கடினமான நேரத்தில் என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உங்களோடு மற்றும் உங்கள் குடும்பத்தினரோடு இருக்கும்” என்று கூறியுள்ளார். #RahulGandhi
    Next Story
    ×