search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை
    X

    எடப்பாடி அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை

    எடப்பாடி அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்ததால் வி‌ஷ விதையை தின்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெடிக்காரண்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (55). இவருக்கு காவியா(25), விஜயா(20) என இரு மகள்கள் உள்ளனர். மகள்கள் திருமணம் முடித்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் மனைவியை பிரிந்து பழனிசாமி தனியாக வாழந்து வந்தார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட பழனிசாமி நேற்று அரளி  விதைகளை அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாந்தி ஏற்பட்டு மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி நேற்றிரவு உயிரிழந்தார். பழனிசாமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீசார் அவரது இறப்பு குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×