search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடி அருகே வாலிபர் எரித்துக் கொலை
    X

    பரமக்குடி அருகே வாலிபர் எரித்துக் கொலை

    பரமக்குடி அருகே பாதி எரிந்த நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரை எரித்துக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ளது எஸ்.அண்டக்குடி கிராமம். இங்குள்ள வாழவந்தான் கோவில் அருகே முட்புதரில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

    இதைப்பார்த்த அந்தப் பகுதி மக்கள் பொதுவக்குடி கிராம நிர்வாக அதிகாரி நாகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் எமனேஸ்வரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயங்களையும் சேகரித்தனர்.

    எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எரித்துக் கொன்றது யார்? எதற்காக எரித்துக் கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×