search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே நிதி நிறுவன அதிபருக்கு சரமாரி கத்திக்குத்து
    X

    கோபி அருகே நிதி நிறுவன அதிபருக்கு சரமாரி கத்திக்குத்து

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே நிதி நிறுவன அதிபரை சரமாரி கத்தியால் குத்திய 5 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்த வாலிபர்கள் கவுதம் (வயது 18). கார்த்திக் (21). பிரவீன் (19). விக்னேஷ் (19), பில்கிளிண்டன் (20).

    இவர்கள் 5 பேரும் நண்பர்கள். இவர்களில் நேற்று கார்த்திக் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடன் அவரது நண்பர்களும் சேர்ந்து கார்த்திக்கின் பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருந்தனர்.

    அப்போது கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் குஷியுடன் சென்று கொண்டிருந்தார். வளைந்து... வளைந்து பைக்கை ஓட்டினாராம்

    இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரான நந்தீஸ்வரன் (31) என்பவர், “ஏன் தம்பி இப்படி பயமுறுத்துவது போல் வண்டி ஓட்டுகிறாய்?” என்று கேட்டார்.

    இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பிறகு அது மோதலாக வெடித்தது.

    இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் மற்றும் பில் கிளிண்டன் ஆகிய 2 பேரும் நந்தீஸ்வரனை சரமாரியாக கத்தியால் குத்தினார்களாம்.

    இதில் அவருக்கு இடுப்பு கழுத்தில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை தாக்கிய 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்களாம். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த நிதிநிறுவன அதிபர் நந்தீஸ்வரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான 5 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×