search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதம்பாக்கத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மனைவியை வெட்டிக் கொல்ல முயற்சி
    X

    ஆதம்பாக்கத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மனைவியை வெட்டிக் கொல்ல முயற்சி

    ஆதம்பாக்கத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மனைவியை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. அ.தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி கவிதா (வயது40). இவர் வட்டி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராபின் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு கவிதா அதே பகுதியில் உள்ள தனது கடை முன் நின்றிருந்தார். அப்போது ஆட்டோ- மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்தபடி 8 பேர் வந்தனர்.

    திடீர் என்று அவர்கள் கவிதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவருக்கு கழுத்து, தலை ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. உடனே அவர் அலறியபடி தப்பி ஓடினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    இதற்குள் 8 பேரும் மோட்டார்சைக்கிள்களில் தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த கவிதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபின், சசி என்ற மணிகண்டன், கார்த்திக், குணா, விஜி, மற்றொரு கார்த்திக் ஆகிய 6 பேரை கைது செய்தனர். ராபின் போலீசாரிடம் கூறுகையில், தனது தந்தை கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

    இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×