என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மாபேட்டை அருகே முன்னாள் விமானப்படை வீரர் வீட்டில் 18½ பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்9 May 2018 5:32 PM GMT (Updated: 9 May 2018 5:32 PM GMT)
ஓய்வு பெற்ற முன்னாள் விமான படை வீரர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாபேட்டை:
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நிலமகள்நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 61). விமான படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாக்கியலெட்சுமி (55).
இந்தநிலையில் சரவணன் மற்றும் பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் குடும்பத்தோடு நேற்று காலை வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18½ பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து சரவணன் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் வீட்டை சோதனை இட்டனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற விமான படை வீரர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நிலமகள்நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 61). விமான படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாக்கியலெட்சுமி (55).
இந்தநிலையில் சரவணன் மற்றும் பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் குடும்பத்தோடு நேற்று காலை வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18½ பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து சரவணன் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் வீட்டை சோதனை இட்டனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற விமான படை வீரர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X