என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
திருவோணம் அருகே அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்திய 4 வாலிபர்கள் கைது
By
மாலை மலர்5 May 2018 10:27 AM GMT (Updated: 5 May 2018 10:27 AM GMT)

திருவோணம் அருகே அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்திய 4 வாலிபர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவோணம்:
திருவோணம் அருகே வெங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையின் தலை கடந்த 3 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் கொடுத்த புகாரின்பேரில் வாட்டாத்திக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தும், தனிப்படை அமைத்தும் தீவிரமாக விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுகுழவாய்ப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் விக்னேஸ்(வயது20), இடையன்காடு கள்ளர் தெருவை சேர்ந்த செல்லையன் மகன் மணி(24), இடையன்காடு சேகர் மகன் தினேஷ்(18), வெங்கரை மேலத்தெரு பாலசுப்பிரமணியன் மகன் அஜித்(24) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இவர்கள் 4 பேரும் தான் அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவோணம் அருகே வெங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையின் தலை கடந்த 3 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் கொடுத்த புகாரின்பேரில் வாட்டாத்திக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தும், தனிப்படை அமைத்தும் தீவிரமாக விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுகுழவாய்ப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் விக்னேஸ்(வயது20), இடையன்காடு கள்ளர் தெருவை சேர்ந்த செல்லையன் மகன் மணி(24), இடையன்காடு சேகர் மகன் தினேஷ்(18), வெங்கரை மேலத்தெரு பாலசுப்பிரமணியன் மகன் அஜித்(24) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இவர்கள் 4 பேரும் தான் அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
