search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
    X

    கோவையில் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-2 மாணவி தற்கொலை

    கோவையில் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை வேடப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். பிளம்பர். இவரது மகள் சந்தியா(வயது18). பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    இவர்கள் குடும்பத்துடன் புதுச்சேரியில் வசித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வேடப்பட்டியில் குடியேறினர்.

    நேற்று மதியம் சந்தியா வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடினர்.

    இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய சந்தியா நேற்று இரவு கிணத்துக்கடவு-போத்தனூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார். அப்போது திடீரென அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதில் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் பெற்றோருக்கு தகவல் கிடைத்து அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட சந்தியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×