என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி- டிரைவர் கைது
Byமாலை மலர்2 May 2018 8:08 AM GMT (Updated: 2 May 2018 8:08 AM GMT)
விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரோவில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் மற்றும் போலீசார் பட்டானூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்துமாறு அதன் டிரைவரிடம் போலீசார் கூறினர். அதற்கு அந்த டிரைவர் டிராக்டர் டிப்பரை நிறுத்தாமல் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் மீது மோத முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ், அங்கிருந்து விலகினார்.
பின்னர் அந்த டிராக்டர் டிப்பரின் டிரைவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் புதுச்சேரி மாநிலம் சிலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த நாராயணசாமி (வயது 52) என்பது தெரிந்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து, டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நாராயணசாமியை போலீசார், வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரோவில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் மற்றும் போலீசார் பட்டானூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்துமாறு அதன் டிரைவரிடம் போலீசார் கூறினர். அதற்கு அந்த டிரைவர் டிராக்டர் டிப்பரை நிறுத்தாமல் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் மீது மோத முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ், அங்கிருந்து விலகினார்.
பின்னர் அந்த டிராக்டர் டிப்பரின் டிரைவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் புதுச்சேரி மாநிலம் சிலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த நாராயணசாமி (வயது 52) என்பது தெரிந்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து, டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நாராயணசாமியை போலீசார், வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X