என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
    X

    மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

    சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த கொமரபாளையம் பாத்திமா நகரை சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 25). சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வந்தார். அப்துல்காதரின் உறவுகாரப்பெண் சாஜிதா (35).

    இருவரும் சத்தியமங்கலம் அருகே டி.ஜி.புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பிறகு திரும்பி வந்தபோது அரசு ஆஸ்பத்திரி அருகே எதிரே வந்த சரக்கு வேனும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது.

    இதில் அப்துல்காதரும் சாஜிதாவும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

    இந்த விபத்து நடந்து மோதிய சரக்கு வேன் நிற்காமல் சென்று விட்டது. விபத்து நடந்ததும் 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் உடனே ஆம்புலன்சு வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து பேசி சமரசம் செய்த பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

    2 பேரை பலி வாங்கிய வேன் அந்த இடத்தில் நிற்காமல் சென்றதை கண்டு பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். ஒரு பிரிவினர் சாலை மறியல் நடத்த மற்றொரு பிரிவினர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களில் அந்த வேனை விரட்டி சென்றனர்.

    சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் அந்த வேனை மடக்கினர். வேன் டிரைவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் இருவரின் உடல்கள் இன்று பரிசோதனை செய்யப்பட்டு பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது.

    அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது. #tamilnews
    Next Story
    ×