என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரம் கடலில் மூழ்கி சிறுவன் பலி
    X

    மாமல்லபுரம் கடலில் மூழ்கி சிறுவன் பலி

    மாமல்லபுரம் கடலில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    கர்நாடக மாநிலம் பூஜ்நல்லி பகுதியை சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் 40க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்துக்கு நேற்று மாலை சுற்றுலா வந்தனர்.

    இவர்கள் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் அபிராம் (வயது14), சதீஷ், தர்‌ஷன் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கினர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் சதீசையும், தர்சனையும் மீட்டனர். அபிராம் மாயமானார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கடற்கரையில் அபிராம் உடல் பிணமாக கரை ஒதுங்கியது.

    Next Story
    ×