என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் அருகே விவசாயிகள் ரெயில் மறியல்- 32 பேர் கைது
    X

    சிதம்பரம் அருகே விவசாயிகள் ரெயில் மறியல்- 32 பேர் கைது

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடலூர் மாட்டம் சிதம்பரம் அருகே உள்ள நீதிக்குடி ரெயில்வே கேட் அருகில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில் இன்று ஏராளமானோர் திரண்டனர்.

    அப்போது அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் அந்த ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 32 பேரை சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    Next Story
    ×